ETV Bharat / city

3 பெண்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது- திடுக் தகவல்

author img

By

Published : Apr 17, 2022, 1:01 PM IST

வாணியம்பாடியில் 3 பெண்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இவர்கள் அந்தப் பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்துவந்தவர்கள் ஆவார்கள்.

கள்ளச்சாராய வழக்கு - 3 பெண்கள் குண்டர் சட்டத்தில் கைது
கள்ளச்சாராய வழக்கு - 3 பெண்கள் குண்டர் சட்டத்தில் கைது

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர், தும்பேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த 3 பெண்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இவர்கள், நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த ராணி (56), ஜோதி (27) மற்றும் தும்பேரி பகுதியை சேர்ந்த தாயம்மாள் (38) ஆகியோர் ஆவார்கள். இவர்கள் ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார்.

குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராணி, ஜோதி மற்றும் தாயம்மாள் ஆகியோர் மீது அம்பலூர் காவல் நிலையத்தில் கள்ளச் சாராய விற்பனை தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனினும் இவர்கள் தொடர்ந்து கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்டுவந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வேலூர் கூட்டுப்பாலியல் வன்புணர்வு வழக்கு: 4 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நேதாஜி நகர், தும்பேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த 3 பெண்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

இவர்கள், நேதாஜி நகர் பகுதியை சேர்ந்த ராணி (56), ஜோதி (27) மற்றும் தும்பேரி பகுதியை சேர்ந்த தாயம்மாள் (38) ஆகியோர் ஆவார்கள். இவர்கள் ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். பாலகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டார்.

குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராணி, ஜோதி மற்றும் தாயம்மாள் ஆகியோர் மீது அம்பலூர் காவல் நிலையத்தில் கள்ளச் சாராய விற்பனை தொடர்பாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனினும் இவர்கள் தொடர்ந்து கள்ளச் சாராய விற்பனையில் ஈடுபட்டுவந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வேலூர் கூட்டுப்பாலியல் வன்புணர்வு வழக்கு: 4 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.